Sunday, July 19, 2020

இறைவா இறங்கிடு

நாவை நாகமென மடித்து
நாள்தோறும் நளினமாய்
நாற்பது பொய்யுரைத்து
நிந்தனைதான் நிரந்தர
சுதந்திர மெனவாதாடும் 
சிந்தனைக்குள் சீக்கிரமாய்
இறைவா! நீ இறங்கி விடு!

மனிதமே மிகச்சிறந்த 
மார்கமென மதங்களும்
மறைகளும் முறையோடு
முன் மொழிந்தாலும் 
மரத்துப்போன மனங்களை 
மாற்ற வல்ல மாரியாய்
மறவாமல், நீ பொழிந்து விடு!

No comments: